» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ல் தீர்ப்பு: மதுரை நீதிமன்றம் அறிவிப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 8:07:02 AM (IST)
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், ஒன்பது போலீசாருக்கு எதிரான தீர்ப்பு வரும் மார்ச் 23-ஆம் தேதி வழங்கப்படும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ஆம் ஆண்டு விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார், கொடூரமாகத் தாக்கியதில் அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இதில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையை மதுரை உயர்நீதிமன்றம் நேரடியாகக் கண்காணித்து வந்தது. வழக்கில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். சிறையில் இருந்தபோது பால்துரை என்ற சார்பு ஆய்வாளர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
கைது செய்யப்பட்டுள்ள 9 போலீசாரின் ஜாமீன் மனுக்கள் மாவட்ட நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று மாலை இந்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிபதி முத்துகுமரன் தீர்ப்புக்கான தேதியை அறிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ஆம் ஆண்டு விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார், கொடூரமாகத் தாக்கியதில் அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இதில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையை மதுரை உயர்நீதிமன்றம் நேரடியாகக் கண்காணித்து வந்தது. வழக்கில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். சிறையில் இருந்தபோது பால்துரை என்ற சார்பு ஆய்வாளர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
கைது செய்யப்பட்டுள்ள 9 போலீசாரின் ஜாமீன் மனுக்கள் மாவட்ட நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று மாலை இந்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிபதி முத்துகுமரன் தீர்ப்புக்கான தேதியை அறிவித்தார்.
மக்கள் கருத்து
BabuMar 3, 2026 - 09:01:45 AM | Posted IP 172.7*****
intha sambavathuku apuram thana nikitha nu oruthi poi case kuduthu oruthara adichu konnanuga ipo avalayum kanom adika sonavan yevanum therila kadasila adichavan kum ithe nilamai than
மேலும் தொடரும் செய்திகள்

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

நெல்லை - தாதர் எக்ஸ்பிஸில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: ரயில் நிலைய மாற்றம் அறிவிப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 10:39:30 AM (IST)

நாங்குநேரி இரட்டைக்கொலை: பழிக்குப்பழி வாங்க அரங்கேறிய பயங்கரம் - திடுக்கிடும் தகவல்கள்!
வியாழன் 5, மார்ச் 2026 8:18:47 AM (IST)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)


முட்டாள் வக்கீல்Mar 3, 2026 - 02:16:26 PM | Posted IP 172.7*****