» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்னிந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசு தலையிட கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
செவ்வாய் 10, மார்ச் 2026 3:49:14 PM (IST)

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நிலவி வரும் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் களைய மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களில் வணிக ரீதியிலான எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமன்றி, பெட்ரோல் உள்ளிட்ட மற்ற எரிபொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற தகவல்கள் பரவி வருவது இந்த அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் கோவிட்-19 பெருந்தொற்றின் உச்சக்கட்டத்தின் போதும் இதேபோன்ற ஒரு சூழல் நிலவியது. அப்போது மத்திய பாஜக அரசு எடுத்த தாமதமான முடிவுகளாலும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததாலும் சாதாரண எளிய மக்களே அதன் பாதிப்புகளைச் சுமக்க வேண்டியிருந்தது. அந்த கசப்பான அனுபவம் தற்போது மீண்டும் நிகழுமோ என்ற பயம் மக்களிடையே எழுந்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடிய இத்தகைய இடையூறுகளைத் தடுக்கத் தேவையான பயனுள்ள நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

நெல்லை - மங்களூரு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
செவ்வாய் 10, மார்ச் 2026 7:59:23 AM (IST)

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)

திருநெல்வேலி- மங்களுர் புதிய வாராந்திர ரயில் அறிவிப்பு: கன்னியாகுமரி பயணிகள் ஏமாற்றம்!
சனி 7, மார்ச் 2026 11:34:43 AM (IST)

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு
வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:03:06 AM (IST)

