» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு உச்சபட்ச தண்டனை உறுதி! - கனிமொழி எம்.பி கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 12:00:00 PM (IST)
விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில் தொடர்புடைய சமூக விரோதிக்குச் சட்டப்படி உச்சபட்ச தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும் எனத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு, குற்றவாளியைக் கைது செய்த தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையைத் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் கனிமொழி பாராட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: "இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிக்கு மிகக் கடுமையான உச்சபட்ச தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்யும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கவும், அவர்கள் இந்தத் துயரிலிருந்து மீண்டு வரவும் எப்போதும் துணையாக இருப்போம்.
குற்றவாளிகளைத் தண்டிப்பதைச் சட்டம் பார்த்துக் கொள்ளும். ஆனால், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சூழலை ஒரு சமூகமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் உறுதிப்படுத்த முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
உண்மMar 20, 2026 - 05:12:11 PM | Posted IP 104.2*****
இது வாய் திறந்தாலே பொய் எல்லாம் வரும் ஆனால் உண்மை எல்லாம் வராது.
மேலும் தொடரும் செய்திகள்

பங்குனி உத்திரத் திருவிழா: ஏப்ரல் 1-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
வெள்ளி 20, மார்ச் 2026 5:03:53 PM (IST)

அனுமதி பெறாத வாகனங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:27:46 PM (IST)

பாஜகவில் இணைந்த நெல்லை, தூத்துக்குடி முக்கியப் பிரமுகர்கள்!
வெள்ளி 20, மார்ச் 2026 11:26:02 AM (IST)

மின்சாரத்தைத் துண்டித்து 2 டிரான்ஸ்பார்மர்களைத் திருடிச் சென்ற மர்ம கும்பல்: நெல்லையில் துணிகரம்!
வெள்ளி 20, மார்ச் 2026 8:34:32 AM (IST)

வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் - 12 மாற்று ஆவணங்கள் அறிவிப்பு!
வியாழன் 19, மார்ச் 2026 5:40:58 PM (IST)

தவெக-வுடன் கூட்டணி பேசவில்லை; ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது: நயினார் நாகேந்திரன் பேட்டி!
வியாழன் 19, மார்ச் 2026 4:23:10 PM (IST)


ஆமாப்பா போதும்பாMar 20, 2026 - 05:17:17 PM | Posted IP 172.7*****