» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கல்லிடைக்குறிச்சியில் ரமலான் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சனி 21, மார்ச் 2026 12:44:36 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் உள்ள ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை இன்று காலை நடைபெற்றது.
புனித ரமலான் மாத நோன்பு நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற இத்தொழுகையை, பள்ளிவாசலின் இமாம் அ. தாஜூத்தீன் முன்னின்று நடத்தினார். அதனைத் தொடர்ந்து, நூருல் ஹிதாயா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் மு. ரஹ்மத் ரபீக் பெருநாளின் சிறப்புகள் குறித்துச் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்.
தொழுகையில் ஜமாத் தலைவர் அ. நாகூர்கனி, செயலர் அ. ஷேக்செய்யது அலி, பொருளாளர் என். அஜிஸ், துணைத் தலைவர் அ. நாகூர் மீரான், தணிக்கையாளர் கே.பி.எஸ். முகம்மது உசேன் உள்பட ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்:
தொழுகை நிறைவடைந்ததும், அங்கு குழுமியிருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர். மேலும், ரமலான் மாதம் முழுவதும் நோன்புக் கஞ்சி மற்றும் சஹர் உணவு வழங்க ஏற்பாடு செய்த தன்னார்வலர்கள் மற்றும் உபயதாரர்கள் அனைவருக்கும் ஜமாஅத் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கிப் பெண் ஊழியர் நடுரோட்டில் சரமாரி வெட்டிக் கொலை: நெல்லையில் கொடூரம்!
ஞாயிறு 17, மே 2026 11:28:21 AM (IST)

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)


