» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி தொகுதியில் தபால் வாக்குப்பதிவு : பொதுப் பார்வையாளர் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:54:44 PM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் நாள் தபால் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூனியூர் பகுதியில் தபால் வாக்குப்பதிவு நடைபெறுவதைத் தேர்தல் பொதுப் பார்வையாளர் அனுபா ஸ்ரீவஸ்தவா இன்று (13.04.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 6,027 வாக்காளர்கள் தபால் வாக்குப்பதிவிற்கு விண்ணப்பித்துள்ளனர். முதல் நாளான நேற்று (12.04.2026), மாவட்டத்தில் மொத்தம் 2,340 பேர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜந்து சட்டமன்ற தொகுதிகளிலும் 85 வயது மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குப்பதிவிற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டு, 6027 வாக்காளர்கள் தபால் வாக்குபதிவிற்கு விண்ணப்பித்துள்ளார்கள்.
அதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் 85 வயதிற்குட்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு சேகரிப்பு பணிகள் 12.04.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்றைய தினம் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் 352 வாக்காளர்களும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 274 வாக்காளர்களும், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 305 வாக்காளர்களும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 199 வாக்காளர்களும், இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 286 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
மாற்றுதிறனாளி வாக்காளர்கள் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் 252 நபர்களும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 261 நபர்களும், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 101 நபர்களும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 122 நபர்களும், இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 188 நபர்களும் என திருநெல்வேலி மாவட்டத்தில் 85 வயது மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 2340 வாக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கிப் பெண் ஊழியர் நடுரோட்டில் சரமாரி வெட்டிக் கொலை: நெல்லையில் கொடூரம்!
ஞாயிறு 17, மே 2026 11:28:21 AM (IST)

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)


