» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் ஓடை போல் மாறிய தாமிரபரணி ஆறு: அணைகளின் நீர்மட்டம் சரிவு!
புதன் 6, மே 2026 8:26:37 PM (IST)

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நெல்லை மாவட்டத்தின் வாழ்வாதாரமான தாமிரபரணி ஆறு போதிய நீர்வரத்தின்றி வறண்டு ஓடை போல் காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வெயிலின் தாக்கம் 100 டிகிரியைத் தாண்டி பதிவாகி வருகிறது. மே 4-ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் (கத்தரி வெயில்), வரும் மே 28-ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது.ஆங்காங்கே பெய்யும் லேசான மழை கோடை வெப்பத்தைத் தணிக்கப் போதுமானதாக இல்லை.
அணைகளின் நீர்மட்டம் சரிவு:
கோடை வெப்பத்தால் நீர்நிலைகள் வற்றி வருவதால், மாவட்டத்தின் முக்கிய அணைகளின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது:
பாபநாசம் அணை: 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 44 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இங்கிருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
மணிமுத்தாறு அணை: 118 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் 77 அடியாக உள்ளது. குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் ஆற்றில் விடப்படுகிறது.
அணைகளில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுவதால், எப்போதும் ஆர்ப்பரித்து ஓடும் தாமிரபரணி ஆறு தற்போது மிகவும் குறுகி ஓடை போல் காணப்படுகிறது. குறிப்பாக, நெல்லை மாநகரப் பகுதியில் ஆற்றில் சாக்கடை நீர் கலந்து ஓடுவதால் தண்ணீர் கறுப்பு நிறமாக மாறி அசுத்தமாகக் காட்சியளிக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கிப் பெண் ஊழியர் நடுரோட்டில் சரமாரி வெட்டிக் கொலை: நெல்லையில் கொடூரம்!
ஞாயிறு 17, மே 2026 11:28:21 AM (IST)

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)


