» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் சிஎன்ஜி பிரச்சனையால் பேருந்து சேவை பாதிப்பு : பயணிகள் கடும் அவதி!
செவ்வாய் 12, மே 2026 12:45:33 PM (IST)
தூத்துக்குடி அரசுப் போக்குவரத்து கழகப் பணிமனையில் சிஎன்ஜி எரிபொருள் நிலையம் இல்லாததால், பேருந்துகளுக்கு எரிபொருள் நிரப்ப நீண்ட நேரம் ஆகுவதும், அதன் காரணமாகப் பேருந்து சேவைகள் ரத்தாவதும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி நகரப் பணிமனையில் இருந்து இயக்கப்படும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முறையாக இயக்கப்படுவதில்லை எனப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துகள் அடிக்கடி வழித்தடம் மாற்றப்படுவதால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.
தூத்துக்குடி - நாசரேத் வழித்தடத்தில் இரவு 10:10 மணிக்குச் செல்ல வேண்டிய கடைசிப் பேருந்து, கடந்த ஒரு வாரமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் இயக்கப்படுகிறது. இதனால் கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டால், "ஓட்டுநர் கேஸ் நிரப்பச் சென்றுள்ளார், இதோ வந்துவிடுவார்" என மணிக்கணக்கில் இழுத்தடிப்பதாகப் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
தூத்துக்குடி பணிமனையில் புதிதாக 40-க்கும் மேற்பட்ட சிஎன்ஜி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் பணிமனைக்குள்ளேயே எரிபொருள் நிரப்பும் வசதி இல்லை. இதனால் ஓட்டுநர்கள் தனியாரிடம் உள்ள பங்கிற்குச் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்ப வேண்டியுள்ளது. இதுவே பேருந்துகள் தாமதமாக இயக்கப்பட முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.
பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும், போக்குவரத்துப் பணிமனைக்குள்ளேயே சிஎன்ஜி எரிபொருள் நிலையத்தை உடனடியாக அமைக்க வேண்டும். அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நாசரேத், சாயர்புரம் போன்ற புறநகர் பகுதிகளுக்கான இரவு நேரப் பேருந்து சேவையை முறைப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

கோடை மழையால் குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 9, மே 2026 9:00:15 AM (IST)

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு: மே 31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 8, மே 2026 4:51:54 PM (IST)



Babuமே 12, 2026 - 07:14:14 PM | Posted IP 172.7*****