» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் அருவியில் குளிக்க கட்டணம் ரத்து : வனத்துறை அறிவிப்பு

வெள்ளி 29, மே 2026 12:25:12 PM (IST)

குற்றாலம் அருவியில் ரூ.20 கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை அறிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், குற்றாலத்தில் விரைவில் குளுகுளு சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிக்கரைகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றது. இதில் பழைய குற்றால அருவிக்கரையில் மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்றது. நிறைவுற்ற பணிகளை சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று தொடங்கி வைத்தார்.

தற்போது பழைய குற்றால அருவியில் தண்ணீர் மிகவும் குறைவான அளவே விழுகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை உள்ளது. இதற்கிடையே பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தலா ரூ.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டணம் வசூலிக்கும் முறை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அருவியில் தண்ணீர் விழும்போது பழைய நடைமுறைப்படியே கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory