» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்லிடைக்குறிச்சியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை!

வெள்ளி 29, மே 2026 5:48:30 PM (IST)



கல்லிடைக்குறிச்சியில் ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நேற்று நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தலைமை இமாம் எஸ். முகம்மது முஜம்மில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். இமாம் அ. தாஜூத்தின் தொழுகை நடத்தினார். பெருமாள் குத்பா தலைமை இமாம் ஓதீனார். 

இதில், ஜமாத் தலைவர் அ. நாகூர் கனி, நூருல்ஹிதாயாமகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் மு. ரஹ்மத் ரபீக், ஜமாத் செயலர் அ. ஷேக் செய்யது அலி, துணைத் தலைவர் அ. நாகூர் மீரான், பொருளாளர் என். அஜிஸ், தணிக்கையாளர் முகம்மது உசைன் உள்பட ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதையடுத்து குர்பானி கொடுக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory