» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கக் கூடாது: தமிழக முதல்வருக்கு வைகோ கோரிக்கை!
வியாழன் 4, ஜூன் 2026 12:07:55 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுற்றுச் சூழலுக்கும், விவசாயத்திற்கும், மீனவர்களுக்கும் பெரும் தீங்கினைச் செய்த, கேடு விளைவித்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நாசகார நச்சாலையை எதிர்த்து பல ஆண்டுகள் மக்களைத் திரட்டி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், வணிகர் சங்கங்களும், தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்களும் கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அன்றைய தமிழக அரசு, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எடுபிடியாக மாறி, போராட்டக்காரர்களை நசுக்கும் நோக்கத்தில் காவல்துறை 13 பேரை சுட்டுக் கொன்றது. ஸ்டெர்லைட் வழக்கு உயர்நீதிமன்றத்திலும் ஆண்டுக் கணக்கில் நடத்தப்பட்டு, இறுதியில் உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானமும், நீதியரசி பவானி சுப்புராயனும் கொண்ட அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் தீர்ப்பை வழங்கியது.
இந்தியாவில் தாமிரம் கிடைப்பது இல்லை என்று அண்மையில் பிரதமர் நநேரந்திர மோடி அங்கலாய்த்துக் கொண்டார். அப்படி தாமிரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க வேண்டுமானால் அவரது குஜராத் மாநிலத்திலேயே அமைக்கலாமே? பாரதிய ஜனதா ஆட்சி நடத்தும் மாநிலங்களில் அமைக்கலாமே? தமிழ்நாட்டை நாசமாக்கும் விதத்தில் நம் மாநிலத்தில் வேதாந்தா குழுமம் தாமிர உற்பத்தி ஆலையைத் தொடங்க திட்டமிட்டு, தமிழக அரசை அணுகி அனுமதி பெற முயற்சிப்பதாக கிடைத்த செய்தி உண்மையாக இருக்குமானால் அதைவிட பெரிய அதிர்ச்சி ஒன்றும் இருக்க முடியாது.
தமிழக முதல்-அமைச்சர், வேதாந்தா குழுமம் ஆலை அமைக்க எவ்விதத்திலும் அனுமதி கொடுக்கக் கூடாது என்று தமிழக மக்கள் நலனைக் காக்கவும், குறிப்பாக தூத்துக்குடி மண்டல மக்கள் நலனைக் காக்கவும் ஆன கடமை உணர்ச்சியோடு இந்த வேண்டுகோளை முதல்-அமைச்சர் முன் வைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பேருந்து - பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: மாணவர்கள் உட்பட 10பேர் படுகாயம்!
வியாழன் 4, ஜூன் 2026 5:56:09 PM (IST)

நெல்லையில் பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்ற ஆட்சியர்!
வியாழன் 4, ஜூன் 2026 12:26:10 PM (IST)

நிதி நிறுவன உரிமம் புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் : பெண் விஏஓ கைது! – உதவியாளரும் சிக்கினார்!
வியாழன் 4, ஜூன் 2026 8:43:57 AM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது!
வியாழன் 4, ஜூன் 2026 8:37:41 AM (IST)

2016 ராதாபுரம் தேர்தல் முடிவுகள் செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
புதன் 3, ஜூன் 2026 4:55:48 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: ஆட்சியர் ஆனந்த் மோகன் அதிரடி ஆய்வு!
புதன் 3, ஜூன் 2026 3:41:32 PM (IST)



யாருJun 4, 2026 - 03:56:41 PM | Posted IP 104.2*****