» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தவெக அரசின் அச்சுறுத்தல், மிரட்டல்களுக்கு திமுக அடிபணியாது: கீதா ஜீவன் கண்டனம்!
திங்கள் 20, ஜூலை 2026 11:39:59 AM (IST)
'மிசா' சட்டத்தையே துணிச்சலுடன் எதிர்கொண்ட பாரம்பரியம் கொண்ட திமுக, தற்போதைய தவெக அரசின் இந்த அச்சுறுத்தல், உருட்டல், மிரட்டல்களுக்கு எவ்விதத்திலும் அடிபணியாது என்று முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறி்க்கையில், "விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை ஆளும் தவெக அரசின் நேரடி அழுத்தம் காரணமாகக் காவல் துறையினர் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.மார்க்கண்டேயனைக் கைது செய்ய இவ்வளவு தீவிரமும் வேகமும் காட்டிய தவெக அரசுக்கு, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீதான பாலியல் குற்றச் செய்திகள் அரசின் கண்களுக்குத் தெரியவில்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீதான பாலியல் குற்றங்கள் அனைத்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்டுத் தூய சக்தி போல உலா வருகிறாரா என்றும் விமர்சித்துள்ளார்.
'மிசா' சட்டத்தையே துணிச்சலுடன் எதிர்கொண்ட பாரம்பரியம் கொண்ட திமுக, தற்போதைய தவெக அரசின் இந்த அச்சுறுத்தல், உருட்டல், மிரட்டல்களுக்கு எவ்விதத்திலும் அடிபணியாது. ஜனநாயக நாட்டில் ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகளுக்குப் பதிலாக, ஆதிக்கப் போக்குடன் கட்டவிழ்த்து விடப்படும் இதுபோன்ற அடக்குமுறை அரசியலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எதிர்க்கட்சியினரை மட்டும் திட்டமிட்டுக் குறிவைத்து அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இவ்வளவு தீவிரம் காட்டும் இந்த 'ரீல்ஸ் மாடல்' அரசு, இதே தீவிரத்தைப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் காட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)



இதுJul 20, 2026 - 01:34:00 PM | Posted IP 172.7*****