» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாங்குநேரி வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு!

வெள்ளி 24, ஜூலை 2026 5:17:33 PM (IST)

Nanguneri4i.jpg

வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாங்குநேரி வட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு மாநில திட்டக் குழுவால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியத் திட்டமான வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் (Focus Blocks Development Programme - FBDP) கீழ், பின்தங்கிய வட்டாரங்களைத் தேர்வு செய்து அவற்றின் வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி வட்டம் தேர்வு செய்யப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், சேவைகள் மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.ஆய்வின் ஒரு பகுதியாக, நாங்குநேரி வட்டம், பருத்திப்பாடு பகுதியில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் இருப்பு, தரம், அளவு மற்றும் குடிமைப் பொருட்களின் பதிவேற்றம் ஆகியவை குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பருத்திப்பாடு அரசு துணை சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிகிச்சைகள் மற்றும் மருந்துப் பொருட்களின் இருப்பு குறித்துப் பரிசீலித்தார். ஆய்வின் போது, 5 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் ஆட்சியர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, சின்னமூலைக்கரைப்பட்டி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை, உணவின் தரம், கற்பிக்கும் முறை மற்றும் குழந்தைகளின் வயதிற்கேற்ற உயரம், எடை வளர்ச்சி ஆகியவை குறித்தும், பருத்திப்பாடு ஊராட்சி அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வின் போது, மாவட்ட ஊராட்சி செயலாளர் இசக்கியப்பன், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் முரளி சங்கர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory