» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)
தென்காசி அருகே நர்சிங் கல்லூரி மாணவிக்குத் தொடர் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தலைமறைவாக இருந்த தனியார் மருத்துவக் கல்லூரித் தாளாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி பகுதியிலுள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்குக் கல்லூரியின் தாளாளர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார். இப்புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட தென்காசி காவல்துறையினர், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 சட்டப் பிரிவுகளின் கீழ் கல்லூரித் தாளாளர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கல்லூரித் தாளாளரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரைத் தென்காசி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். கைது நடவடிக்கைக்குப் பிறகு, தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக அவர் கூறியதையடுத்து, அவரை உடனடியாகக் காவல்துறையினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலப் பொது மேலாளராக மோகன் குமார் பொறுப்பேற்பு!
வியாழன் 30, ஜூலை 2026 11:10:30 AM (IST)

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:30:49 AM (IST)

இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரத்த தானம் செய்ய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
புதன் 29, ஜூலை 2026 12:47:15 PM (IST)

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 29, ஜூலை 2026 8:32:40 AM (IST)

நெல்லை பட்டமளிப்பு விழாவில் மாணவிகள் கண்ணீர் : இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்!
செவ்வாய் 28, ஜூலை 2026 3:52:31 PM (IST)

திருமணமான 5 மாதங்களில் கொடூரம்: புதுப்பெண் வெட்டிக்கொலை - கணவர் நீதிமன்றத்தில் சரண்!
செவ்வாய் 28, ஜூலை 2026 8:28:34 AM (IST)


