» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)

நெல்லையில் போலி ஆவணங்களைத் தயாரித்து முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இம்மோசடிக்கு உடந்தையாக இருந்த 2 பெண்கள் கைதாகியுள்ளனர். 

நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் அருகே உள்ள ராஜபதி கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன்; இவரது மனைவி பூரண செல்வி (33). பூரண செல்வியின் தந்தை சங்கரனுக்குச் சித்தார்த்சத்திரம் கிராமத்தில் சொந்தமாக நிலம் இருந்தது. சங்கரனுக்கு இரண்டு மனைவிகள். அதில் ஒரு மனைவியான பூரண செல்வி தவிர, பகவதி (42), சீதாலட்சுமி (47) ஆகிய மகள்களும் உள்ளனர். 

சங்கரன் மறைவுக்குப் பிறகு, சொத்துப் பங்கீட்டில் தன்னிடம் கேட்காமல் பகவதி மற்றும் சீதாலட்சுமி ஆகியோரை மட்டும் கொண்டு சொத்துக்களைப் பங்கீடு செய்யக் கூடாது என பூரண செல்வி கங்கைகொண்டான் சார்பதிவாளர் தங்கபாண்டியனிடம் மனு அளித்திருந்தார். 

ஆனால், சார்பதிவாளர் தங்கபாண்டியன் அம்மனுவை மறைத்துவிட்டு, பகவதி மற்றும் சீதாலட்சுமி தரப்பினருக்கு ஆதரவாகப் போலியான ஆவணங்களைத் தயாரித்து நிலத்தைப் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். 

இம்மோசடி குறித்துத் தெரிந்த பூரண செல்வி, நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது உறுதியானது. 

இதனைத் தொடர்ந்து, விதிகளை மீறி சொத்தை மோசடி செய்தல், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சார்பதிவாளர் தங்கபாண்டியன், தாழையூத்து யாதவர் தெருவைச் சேர்ந்த பகவதி (42) மற்றும் செங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த சீதாலட்சுமி (47) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பகவதி மற்றும் சீதாலட்சுமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory