» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்திற்கு 300 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு: ஆட்சியர் ஸ்ரீதர் தகவல்!
செவ்வாய் 21, நவம்பர் 2023 5:54:54 PM (IST)
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் குமரி மாவட்டத்திற்கு 300 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு ஜனவரி 7 மற்றும் 8, 2024-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. அதில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ.300 கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதலீடுகளை ஈர்த்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்து, நடைமுறைப்படுத்த அனைத்து குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைப்புகள், தொழில் வணிக அமைப்புகள், கல்லூரி கூட்டமைப்பு, அனைத்து நிறுவனங்கள், அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து உறுதி செய்வதற்குரிய வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.இதன்படி ரூ.90 இலட்சத்திற்கு மேலான இயந்திர தளவாட மதிப்புள்ள தொழிற்சாலைகள், பல்நோக்கு அரங்கங்கள், மேம்படுத்தப்பட்ட ஓட்டல்கள், வணிக கூடங்கள் அமைத்தல், முகமை தொழில், வணிக கூட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகிய அனைத்து வகைகளிலும் மாவட்டத்தில் உள்ள தொழில் அமைப்புகள் தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், தொழில் ஆர்வலர்கள், வணிக செயல்பாட்டாளர்கள் றறற.அளஅநழடெiநெ.வn.பழஎ.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.
மாவட்ட தொழில் மையத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும் நிறுவனங்களுக்கு அரசின் ஒப்புதல்கள், உதவிகள், மானியங்கள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 குறித்து அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள மாவட்ட தொழில் மையம், தொழிற்பேட்டை, கோணம், நாகர்கோவில்-4 அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண். 04652-260008 வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுபோதையில் லாரி ஓட்டியவருக்கு அபராதம்: ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை!
செவ்வாய் 24, மார்ச் 2026 12:48:06 PM (IST)

விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.1.57 கோடி நஷ்டஈடு: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 24, மார்ச் 2026 12:38:45 PM (IST)

புதுச்சேரியில் திமுக கூட்டணியில் பிளவு: தனித்துப் போட்டியிட திருமாவளவன் முடிவு
செவ்வாய் 24, மார்ச் 2026 10:52:06 AM (IST)

சாத்தான்குளம் வழக்கில் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் : அமைச்சர் ரகுபதி அறிக்கை
செவ்வாய் 24, மார்ச் 2026 8:24:38 AM (IST)

வீட்டை உடைத்து 46 பவுன் நகை கொள்ளை - 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது; நகைகள் மீட்பு!
திங்கள் 23, மார்ச் 2026 9:40:44 PM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 23, மார்ச் 2026 5:18:11 PM (IST)

