» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்திற்கு 300 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு: ஆட்சியர் ஸ்ரீதர் தகவல்!
செவ்வாய் 21, நவம்பர் 2023 5:54:54 PM (IST)
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் குமரி மாவட்டத்திற்கு 300 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

இதன்படி ரூ.90 இலட்சத்திற்கு மேலான இயந்திர தளவாட மதிப்புள்ள தொழிற்சாலைகள், பல்நோக்கு அரங்கங்கள், மேம்படுத்தப்பட்ட ஓட்டல்கள், வணிக கூடங்கள் அமைத்தல், முகமை தொழில், வணிக கூட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகிய அனைத்து வகைகளிலும் மாவட்டத்தில் உள்ள தொழில் அமைப்புகள் தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், தொழில் ஆர்வலர்கள், வணிக செயல்பாட்டாளர்கள் றறற.அளஅநழடெiநெ.வn.பழஎ.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.
மாவட்ட தொழில் மையத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும் நிறுவனங்களுக்கு அரசின் ஒப்புதல்கள், உதவிகள், மானியங்கள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 குறித்து அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள மாவட்ட தொழில் மையம், தொழிற்பேட்டை, கோணம், நாகர்கோவில்-4 அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண். 04652-260008 வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செயற்கை கருத்தரிப்பு குழந்தைகளின் சங்கமம்
செவ்வாய் 5, டிசம்பர் 2023 8:04:55 PM (IST)

திட்டமிடாத திமுக அரசால் மக்கள் இன்னலை சந்திக்கின்றனர்: இ.பி.எஸ் குற்றச்சாட்டு
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:46:40 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.17 கோடியில் வளர்ச்சித் திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:27:49 PM (IST)

வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்: நடிகர் விஷ்ணு விஷால், ஆமிர் கான் பத்திரமாக மீட்பு
செவ்வாய் 5, டிசம்பர் 2023 4:56:50 PM (IST)

2015-ல் ஏற்பட்டது செயற்கை வெள்ளம்; இது இயற்கை வெள்ளம்! - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
செவ்வாய் 5, டிசம்பர் 2023 3:44:11 PM (IST)

அதிமுகவில் சசிகலாவை நீக்கியது செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 5, டிசம்பர் 2023 12:42:54 PM (IST)
