» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் சாலை விரிவாக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 11:49:23 AM (IST)
நெல்லை - திருச்செந்தூர் நெடுஞ்சாலை விரிவாக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் விபி ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

ஆண்டுதோறும் தைப்பொங்கல் மற்றும் தைப்பூசத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சாலை வேலை நடைபெறுவதால் பல சிரமங்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, பல பக்தர்களின் கால்களில் காயங்கள் ஏற்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.
தைப்பூச திருவிழாவிற்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் சாலை விரிவாக்க பணிகள் பெரும்பாலான இடங்களில் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளையும் துரிதமாக முடித்து திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சிரமம் இன்றி சென்றுவர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தனியாா் மினி பஸ்களை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
ஞாயிறு 11, மே 2025 11:51:14 AM (IST)

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி
ஞாயிறு 11, மே 2025 10:37:49 AM (IST)

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)

அரசு மாதிரிப் பள்ளியில் ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
சனி 10, மே 2025 8:21:06 PM (IST)

தேசிய சராசரியைவிட தமிழகத்தில் கல்வித் தரம் சிறப்பாக உள்ளது : மாநில திட்டக் குழு தகவல்
சனி 10, மே 2025 5:51:33 PM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)
