» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டம் : ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 2, ஏப்ரல் 2024 5:24:16 PM (IST)
தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (RTE) மாணவர் சேர்க்கைக்கு வருகிற 22-ஆம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்புகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிகளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு 25 சதவிகிதம் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இதில் மாணவர்கள் சேர்க்கைக்கு அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையற்ற தனியாா், சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் (எல்கேஜி, முதல் வகுப்பு) பள்ளிவாரியாக உள்ள மொத்த இடங்கள், அவற்றில் 25 சதவிகித இடங்கள் ஆகிய விவரங்களை இணையதளம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலா்களின் தகவல் பலகைகள், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தகவல் பலகைகள் ஆகியவற்றில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகளை தனியார் பள்ளி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறையின் (rte.tnschools.gov.in) RTE மாணவர் சேர்க்கை இணையதளம் மூலம் பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு இம்மாதம் 22-ஆம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
மே 20-ஆம் தேதியுடன் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நிறைவுபெறுகிறது என்று தனியார் பள்ளி இயக்குனர் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தகுதி பெற்றவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் விவரம் அந்தந்த பள்ளி தகவல் பலகைகள் மற்றும் இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.
மக்கள் கருத்து
G.siva sakthiApr 3, 2024 - 06:23:04 PM | Posted IP 162.1*****
Ggjjvc
Merunika sriApr 2, 2024 - 06:24:15 PM | Posted IP 172.7*****
In kunnathur what are the schools with RTE
மேலும் தொடரும் செய்திகள்

கப்பலில் இறந்த 3பேருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:48:22 PM (IST)

போதைப் பொருள் என்பது ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும் : அமைச்சர் பி.கீதா ஜீவன் பேச்சு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:31:17 PM (IST)

கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் அரசு சேவைகள்: ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான விதிமுறைகள் : த.வெ.க. வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:12:16 PM (IST)

சிறப்பு கல்வி கடன் முகாமில் ரூ.1.87 கோடி மதிப்பில் கடனுதவி : எம்எல்ஏ தகவல்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:43:29 PM (IST)

முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பயிர்களை பயிரிட வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத்.
வியாழன் 18, செப்டம்பர் 2025 4:35:38 PM (IST)

Neelagandan GApr 5, 2024 - 07:05:51 PM | Posted IP 172.7*****