» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பறக்கும் படையினர் வாகன சோதனை : குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு!
புதன் 3, ஏப்ரல் 2024 4:12:31 PM (IST)

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்ற உள்ள மண்டல அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், ஆலோசனை வழங்கினார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இன்று (03.04.2024) கன்னியாகுமரி பாராளுமன்றத்திற்குட்பட்ட கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் வாக்களிக்க உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கு கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மண்டல அலுவலர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது, குறிப்பிட்ட நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சென்று அந்த இயந்திரங்கள் சரியாக இயங்குகிறதா என்பதை சோதனை செய்வது, வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து மண்டல அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து படிவங்களும் உள்ளதா என்பதை சரிபார்ப்பது, மாற்றுத்திறன் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளதா என்பது கண்காணிக்க வேண்டும் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தேவையான மின்கலன் (பேட்டரி) உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மண்டல அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்.
முன்னதாக அவர் கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட செல்பவர்களும், வருகை பதிவேட்டினை பார்வையிட்டதோடு, வாக்குச்சாவடிகளில் அனுப்பி வைக்கப்பட உள்ள படிவங்கள் குறித்து அலுவலர்களுடன் கேட்டறிந்தார்கள். மேலும் வாக்குச்சாவடிகளுக்கு மண்டல அலுவலர்களால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான வாகன ஒத்துகை நிகழ்ச்சியினை பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து கிள்ளியூர் சட்டமன்றத்திற்குட்பட்ட பாலுர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், அலுவலர்களுடன் கேட்டறிந்தார். நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கிள்ளியூர் சட்டமன்ற உதவி தேர்தல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (கலால்) லொரைட்டா, கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் சமூக பாதுகாப்பு தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டம் புதிய அத்தியாயம் படைத்துள்ளது : அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்!
புதன் 19, பிப்ரவரி 2025 3:22:23 PM (IST)

முதல்வர் மருந்தகங்கள் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 19, பிப்ரவரி 2025 12:27:35 PM (IST)

தமிழக பட்ஜெட் மார்ச் 14-ல் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
புதன் 19, பிப்ரவரி 2025 12:22:43 PM (IST)

வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 பவுன் தங்க நகை மாயம்: துணை மேலாளர் கைது!
புதன் 19, பிப்ரவரி 2025 12:18:31 PM (IST)

சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.வுடன் கூட்டணி : தமிழ்நாடு முஸ்லிம் லீக் மறுப்பு
புதன் 19, பிப்ரவரி 2025 12:05:05 PM (IST)

வீண் பெருமை பேசாமல் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் : அன்புமணி காட்டம்!
புதன் 19, பிப்ரவரி 2025 11:06:00 AM (IST)
