» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இலங்கை ரோந்துப்படகு மோதி பலியான மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி:முதல்வர் !
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 4:51:40 PM (IST)
இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் பலியான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூக்கையா (வயது 54), முத்துமுனியாண்டி (வயது 57), மலைச்சாமி (வயது 59) மற்றும் ராமச்சந்திரன் (வயது 64) ஆகிய நால்வரும் இன்று (ஆக. 1) அதிகாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்குவந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி (வயது 59) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.மேலும், அந்த விசைப்படகில் சென்ற இரண்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அழைத்துச் சென்றதாகத் தெரிய வருகிறது. மேலும், மற்றொரு மீனவர் தேடப்பட்டு வருகிறார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து பலமுறை கடிதம் மூலமாகவும், நேரிலும் மத்திய அரசை வலியுறுத்தியும் உரிய தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் இதுபோன்ற விலைமதிப்பில்லா உயிரிழப்புகளும் நேர்கின்றது.
இச்சம்பவத்தை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு தக்க முறையில் எடுத்துச் செல்லும். இச்சம்பவத்தில் உயிரிழந்த மலைச்சாமியின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொடர் மழை: நெல்லை, தூத்துக்குடியில் 67 குளங்கள் நிரம்பின!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:36:51 AM (IST)

தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் திடீர் உயர்வு? அதிகாரிகள் விளக்கம்
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:34:53 AM (IST)

தெருநாய் கடித்து மாணவ, மாணவியர் உள்பட 14 பேர் படுகாயம் : அரசு மருத்துவமனையில் அனுமதி
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:22:40 AM (IST)

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா: தங்க சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் வீதி உலா!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:10:40 AM (IST)

திருச்செந்தூர் கோயில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 24, அக்டோபர் 2025 7:53:06 AM (IST)

தூத்துக்குடியில் கந்த சஷ்டி விழா 2வது நாள் : வெள்ளி சப்பரத்தில் சுவாமி வீதியுலா
வியாழன் 23, அக்டோபர் 2025 8:26:08 PM (IST)




