» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இலங்கை ரோந்துப்படகு மோதி பலியான மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி:முதல்வர் !
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 4:51:40 PM (IST)
இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் பலியான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், அந்த விசைப்படகில் சென்ற இரண்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அழைத்துச் சென்றதாகத் தெரிய வருகிறது. மேலும், மற்றொரு மீனவர் தேடப்பட்டு வருகிறார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து பலமுறை கடிதம் மூலமாகவும், நேரிலும் மத்திய அரசை வலியுறுத்தியும் உரிய தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் இதுபோன்ற விலைமதிப்பில்லா உயிரிழப்புகளும் நேர்கின்றது.
இச்சம்பவத்தை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு தக்க முறையில் எடுத்துச் செல்லும். இச்சம்பவத்தில் உயிரிழந்த மலைச்சாமியின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டம் புதிய அத்தியாயம் படைத்துள்ளது : அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்!
புதன் 19, பிப்ரவரி 2025 3:22:23 PM (IST)

முதல்வர் மருந்தகங்கள் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 19, பிப்ரவரி 2025 12:27:35 PM (IST)

தமிழக பட்ஜெட் மார்ச் 14-ல் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
புதன் 19, பிப்ரவரி 2025 12:22:43 PM (IST)

வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 பவுன் தங்க நகை மாயம்: துணை மேலாளர் கைது!
புதன் 19, பிப்ரவரி 2025 12:18:31 PM (IST)

சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.வுடன் கூட்டணி : தமிழ்நாடு முஸ்லிம் லீக் மறுப்பு
புதன் 19, பிப்ரவரி 2025 12:05:05 PM (IST)

வீண் பெருமை பேசாமல் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் : அன்புமணி காட்டம்!
புதன் 19, பிப்ரவரி 2025 11:06:00 AM (IST)
