» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கார் விபத்தில் தினபூமி நாளிதழ் உரிமையாளர் பலி : மகன் படுகாயம்!!

திங்கள் 14, அக்டோபர் 2024 9:09:21 PM (IST)



கோவில்பட்டி அருகே கார் விபத்தில் தினபூமி நாளிதழ் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.

மதுரை கே.கே. நகரைச் சேர்ந்தவர் மணிமாறன் (65). தினபூமி நாளிதழ் உரிமையாளர். இவரது மகன் சதீஷ் (45). இவர்கள் இருவரும் இன்று திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு காரில் சென்றனர். காரை சதீஷ் ஓட்டினார். தேசிய நான்கு வழிச் சாலையில் நாலாட்டின்புதூர் மேம்பாலத்தை கடந்து வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி, எதிர்புறம் உள்ள சாலைக்கு சென்று, அவ்வழியே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. 

இவ்விபத்தில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சதீஷ் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து நாலாட்டின்புதூர் போலீசார், அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிமாறன் உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. லேசான காயமடைந்த கண்டேயனர் லாரி ஓட்டுநர் தேரையூர் தாலுகா சாட்டூரைச் சேர்ந்த அசோக்குமார் (28) அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory