» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
படகு பழுதாகி நடுக்கடலில் 6 மீனவர்கள் தவிப்பு : மீட்பு பணி தீவிரம்!
சனி 30, நவம்பர் 2024 10:13:37 AM (IST)
தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது படகு இன்ஜின் பழுதாகி நடுக்கடலில் தத்தளிக்கு மீனவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சதீஷ்குமார் என்பவரது படகில் விக்னேஷ், அல்போன்ஸ், ஜூடு, சுதர்சன், ஜார்ஜ் ஆகிய 6 மீனவர்கள் கடந்த 21 ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் ராமேசுவரம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர்.
கடந்த 26ஆம் தேதி கரை திரும்ப வேண்டிய இவர்கள் கரை திரும்பவில்லை. இது குறித்து தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி சங்கம் சார்பில் தூத்துக்குடி மீன்வளத்துறை, மாவட்ட நிர்வாகம், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை, கடலோர பாதுகாப்புப் படை ஆகியோருக்கு புகார் அளித்தனர்.
இந்நிலையில், சுமார் 45 கடல் மைல் தொலைவில் படகில் இன்ஜின் பழுதாகி நிற்பதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே மீனவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வருவதற்காக 3 படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் பஸ்கள் ஓடவில்லை: கோவையில் இருந்து புறப்பட்ட 50 பஸ்கள் எல்லையில் நிறுத்தம்!
புதன் 9, ஜூலை 2025 11:36:56 AM (IST)

அதிகாரிகள் கொடுமையால் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை: அன்புமணி குற்றச்சாட்டு
புதன் 9, ஜூலை 2025 10:46:28 AM (IST)

தமிழகத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்!
புதன் 9, ஜூலை 2025 10:35:19 AM (IST)

திருச்செந்தூர் கோவில் மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் கடமையை செய்வேன்: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 8:12:52 PM (IST)

எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:56:47 PM (IST)

கடலூர் ரயில் விபத்துக்கு மாவட்ட ஆட்சியரே காரணமா? தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
செவ்வாய் 8, ஜூலை 2025 4:46:14 PM (IST)
