» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
படகு பழுதாகி நடுக்கடலில் 6 மீனவர்கள் தவிப்பு : மீட்பு பணி தீவிரம்!
சனி 30, நவம்பர் 2024 10:13:37 AM (IST)
தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது படகு இன்ஜின் பழுதாகி நடுக்கடலில் தத்தளிக்கு மீனவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சதீஷ்குமார் என்பவரது படகில் விக்னேஷ், அல்போன்ஸ், ஜூடு, சுதர்சன், ஜார்ஜ் ஆகிய 6 மீனவர்கள் கடந்த 21 ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் ராமேசுவரம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர்.
கடந்த 26ஆம் தேதி கரை திரும்ப வேண்டிய இவர்கள் கரை திரும்பவில்லை. இது குறித்து தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி சங்கம் சார்பில் தூத்துக்குடி மீன்வளத்துறை, மாவட்ட நிர்வாகம், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை, கடலோர பாதுகாப்புப் படை ஆகியோருக்கு புகார் அளித்தனர்.
இந்நிலையில், சுமார் 45 கடல் மைல் தொலைவில் படகில் இன்ஜின் பழுதாகி நிற்பதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே மீனவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வருவதற்காக 3 படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35பேர் உள்ளனர்: ஆட்சியர் அழகுமீனா தகவல்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:50:25 PM (IST)

புதிதாக 16,94,339 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:34:58 PM (IST)

திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல... சர்வே தூண் தான்! - தமிழக அரசு வாதம்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:26:29 PM (IST)

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று: காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:31:00 PM (IST)

பெண்குரலில் பேசி வாலிபரிடம் ரூ.17½ லட்சம் மோசடி செய்தவர் கைது!
வெள்ளி 12, டிசம்பர் 2025 3:28:52 PM (IST)

தூத்துக்குடியில் ரயில் சேவையில் மாற்றம் : முத்துநகர் எக்ஸ்பிரஸ் மணியாச்சியில் இருந்து இயக்கம்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:25:21 PM (IST)


