» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது: தமிழகம், இலங்கை கடற்கரை நோக்கி நகரும்!
வெள்ளி 6, டிசம்பர் 2024 3:57:17 PM (IST)
வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலை அடையும் என்றும் 12-ம் தேதி வாக்கில் தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொடர் மழை: நெல்லை, தூத்துக்குடியில் 67 குளங்கள் நிரம்பின!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:36:51 AM (IST)

தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் திடீர் உயர்வு? அதிகாரிகள் விளக்கம்
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:34:53 AM (IST)

தெருநாய் கடித்து மாணவ, மாணவியர் உள்பட 14 பேர் படுகாயம் : அரசு மருத்துவமனையில் அனுமதி
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:22:40 AM (IST)

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா: தங்க சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் வீதி உலா!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:10:40 AM (IST)

திருச்செந்தூர் கோயில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 24, அக்டோபர் 2025 7:53:06 AM (IST)

தூத்துக்குடியில் கந்த சஷ்டி விழா 2வது நாள் : வெள்ளி சப்பரத்தில் சுவாமி வீதியுலா
வியாழன் 23, அக்டோபர் 2025 8:26:08 PM (IST)




