» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 125 போ் தோ்வு: ஆட்சியர் அழகுமீனா ஆணை வழங்கினார்
ஞாயிறு 19, ஜனவரி 2025 11:06:49 AM (IST)

நாகா்கோவிலில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 125 பேருக்கு தற்காலிக பணி நியமன ஆணகளை ஆட்சியர் அழகுமீனா வழங்கினாா்.
கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு புத்தொழில் -புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் -மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
இம்முகாமில், கன்னியாகுமரி மட்டுமன்றி சென்னை, கோயம்புத்தூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 22 நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான பணியாள்களை தோ்வு செய்தனா். மாவட்டம் முழுவதுமிருந்து சுமாா் 500 மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனா். அதில் 125 மாணவ- மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்து, 125 பேருக்கு தற்காலிக பணி நியமன ஆணகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலக உதவி இயக்குநா் லட்சுமி காந்தன், தமிழ்நாடு புத்தொழில் - புத்தாக்க இயக்க திருநெல்வேலி மண்டல திட்ட மேலாளா் ராகுல், மண்டல திட்ட மேலாளா் ஜிஜின் துரை, பல்வேறு நிறுவனங்களைச் சோ்ந்த மனித வள அலுவலா்கள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது : அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
சனி 12, ஜூலை 2025 1:05:17 PM (IST)

குரூப் 4 வினாத்தாள் கசிய வாய்ப்பு? தனியார் பஸ்களில் எடுத்து செல்லப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 11, ஜூலை 2025 5:18:09 PM (IST)

ஆளுநரின் அதிகாரங்களில் முதல்வர் தலையிடக் கூடாது : ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி!
வெள்ளி 11, ஜூலை 2025 4:33:19 PM (IST)

உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்
வெள்ளி 11, ஜூலை 2025 12:27:27 PM (IST)

புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி
வெள்ளி 11, ஜூலை 2025 12:17:16 PM (IST)

அங்கன்வாடிகள் மூடப்படும் என்பது தவறான தகவல்: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
வெள்ளி 11, ஜூலை 2025 11:59:39 AM (IST)
