» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வெள்ளி 11, ஏப்ரல் 2025 12:02:49 PM (IST)
திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி இந்து மதத்தின் சைவ, வைணவ மார்க்கங்கள் பற்றியும், பெண்களைப் பற்றியும் இழிவாகப் பேசியுள்ளர். அவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.
இந்நிலையில், பொன்முடி பேச்சை ‘அருவருப்பானது’ என்று குறிப்பிட்டு திமுக எம்.பி. கனிமொழி இன்று காலை எக்ஸ் சமூகவலைதளத்தில் கண்டன ட்வீட் செய்திருந்தார். இத்தகைய சூழலில் பொன்முடியின் கட்சிப் பதவியை பறித்தும் அந்தப் பதவியில் திருச்சி சிவாவை நியமித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கழக சட்டதிட்ட விதி: 17 - பிரிவு :3-ன்படி கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா, எம்.பி.யை, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:56:05 PM (IST)

தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:24:38 PM (IST)

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:18:54 AM (IST)

திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் கோவில் வடிவமைப்பு : தமிழக முதல்வருக்கு சேகர்பாபு புகழாரம்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:58:07 AM (IST)

அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:50:13 PM (IST)

காவல்துறைக்கு துப்பாக்கி கொடுப்பது என்கவுன்ட்டர் செய்வதற்கு அல்ல: உயர்நீதிமன்றம் கண்டனம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:41:53 PM (IST)

இது தான் அரசியல்Apr 11, 2025 - 12:06:58 PM | Posted IP 172.7*****