» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்: ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 11, ஏப்ரல் 2025 12:47:24 PM (IST)
குமரி மாவட்டத்தில் ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனாஅறிவித்துள்ளார்.
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் விதிகள் 2020 கீழ் தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்திற் கொண்டும் மீன்வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை (இரண்டு நாட்கள் உட்பட) 61 நாட்களுக்கு இழுவலை விசைப்படகுகள் மற்றும் தூண்டில் / வழிவலை விசைப்படகுகள் கிழக்கு கடலோர பகுதியில் மீன்பிடிப்பதற்கு ஆண்டுத்தோறும் தடைவிதிக்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் (2025) தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் விதிகள் 2020-ன்படி கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு கடலோர பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரையிலும் மீனவர்கள் இழுவலை விசைப்படகுகள் அல்லது தூண்டில் / வழிவலை விசைப்படகினை பயன்படுத்தி மீன்பிடிப்பது 61 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
மீன்பிடி தடைக்காலத்தில் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபடும் நபர்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் விதிகள் 2020-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:56:05 PM (IST)

தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:24:38 PM (IST)

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:18:54 AM (IST)

திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் கோவில் வடிவமைப்பு : தமிழக முதல்வருக்கு சேகர்பாபு புகழாரம்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:58:07 AM (IST)

அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:50:13 PM (IST)

காவல்துறைக்கு துப்பாக்கி கொடுப்பது என்கவுன்ட்டர் செய்வதற்கு அல்ல: உயர்நீதிமன்றம் கண்டனம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:41:53 PM (IST)
