» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பயங்கரவாதச் செயலுக்கு வலிமையான பதில்: இந்திய ராணுவத்திற்கு கமல்ஹாசன் பாராட்டு
புதன் 7, மே 2025 4:01:00 PM (IST)
கோழைத்தனமான பயங்கரவாதச் செயல்களால் பிரிக்கப்படாத ஒரு வலிமையான தேசத்தின் உறுதியான பதில் இது என்று மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் நடத்திய இந்த அதிரடி தாக்குதலுக்கு பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் பல்வேறு தரப்பினரும் இந்த நடவடிக்கைக்கு தங்களின் ஆதரவை தெரிவத்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் இந்திய ராணுவ நடவடிக்கையை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பெருமைமிக்க இந்தியா தனது ஆயுதப் படைகளுடன் ஒற்றுமையாக நிற்கிறது. கோழைத்தனமான பயங்கரவாதச் செயல்களால் பிரிக்கப்படாத ஒரு வலிமையான தேசத்தின் உறுதியான பதில் இது. இந்திய அரசு எடுத்த தீர்க்கமான மற்றும் மூலோபாய ராணுவ நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சனி 31, மே 2025 5:46:53 PM (IST)

தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றிய 8,144 பேர் இன்று ஒரே நாளில் பணி ஓய்வு!
சனி 31, மே 2025 5:24:36 PM (IST)

அன்புமணி- ராமதாஸ் பிரிவினைக்கு நான் காரணமா? பாமக உட்கட்சி குழப்பதால் ஜி.கே.மணி வேதனை
சனி 31, மே 2025 5:20:29 PM (IST)

வள்ளுவரை சனாதன துறவி என்பதா? ஆளுநர் பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்!
சனி 31, மே 2025 5:15:55 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் தீவிரம் : ஆணையத் தலைவர் பெருமிதம்
சனி 31, மே 2025 4:51:36 PM (IST)

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆட்சியர் ஆய்வு!
சனி 31, மே 2025 4:16:14 PM (IST)
