» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆட்சியர் ஆய்வு!
சனி 31, மே 2025 4:16:14 PM (IST)

பேச்சிப்பாறை அணையின் மதகு பாதுகாப்பு தன்மை, பொதுமக்கள் மற்றும் விவசாய நிலங்கள், நீர் வழித்தடங்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம், பேச்சிப்பாறை அணையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (31.05.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில் – கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகளவு மழை பொழிவதால் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 42.98 அடியாகவும் நீர் வரத்து 2195 கன அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 55.35 அடியாகவும் நீர் வரத்து 1402 கன அடியாகவும், உபரி நீர் வெளியேற்றம் 22 கன அடியாகவும், சிற்றார் I அணையின் நீர் மட்டம் 7.94 அடியாகவும் நீர்வரத்து 133 கன அடியாகவும், சிற்றார் II அணையின் நீர் மட்டம் 8.03 அடியாகவும், நீர்வரத்து 212 கன அடியாக உள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் I மற்றும் II அணைகளிலிருந்து 01.06.2025 முதல் 28.02.2026 வரை வினாடிக்கு 850 கன அடி வீதம் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், கல்குளம் வட்டம், கிள்ளியூர் வட்டம், திருவட்டார் வட்டம், விளவங்கோடு வட்டம் மற்றும் அதனைச் சார்ந்த கிராமங்களில் உள்ள 79000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும் தொடர்ந்து மழை பொழியும் போது நீர் வரத்து அதிகரிக்கும். இதனால் அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படும் சூழ்நிலை ஏற்படின் அணையின் மதகு பாதுகாப்பு தன்மை, பொதுமக்கள் மற்றும் விவசாய நிலங்கள், நீர் வழித்தடங்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அணையின் நீர் வரத்து அளவினை அவ்வப்போது கண்காணித்திட நீர்வளத்துறை அலுவலர்கள், பணியளார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். ஆய்வில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் மூர்த்தி, துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாங்கள்தான் மாற்று என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள்: மதுரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
ஞாயிறு 1, ஜூன் 2025 4:04:22 PM (IST)

மாநிலங்களவை தேர்தலில் இன்பதுரை, தனபால் போட்டி: அதிமுக தலைமை அறிவிப்பு
ஞாயிறு 1, ஜூன் 2025 3:54:38 PM (IST)

கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்றத்தில் இயற்கை வளம் சிறக்க கலச விளக்குவேள்வி பூஜை
ஞாயிறு 1, ஜூன் 2025 3:47:38 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சனி 31, மே 2025 5:46:53 PM (IST)

தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றிய 8,144 பேர் இன்று ஒரே நாளில் பணி ஓய்வு!
சனி 31, மே 2025 5:24:36 PM (IST)

அன்புமணி- ராமதாஸ் பிரிவினைக்கு நான் காரணமா? பாமக உட்கட்சி குழப்பதால் ஜி.கே.மணி வேதனை
சனி 31, மே 2025 5:20:29 PM (IST)
