» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்றவர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 30, மே 2025 11:51:07 AM (IST)

தூத்துக்குடியில் மருந்து கடையில் போதை மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.
தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தை சேர்ந்தவர் பாட்டையன் மகன் மாரி செல்வம் (22), இவர் தாளமுத்து நகரில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவர் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக வடபாகம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் திரேஸ்புரம் திருவள்ளுவர் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஊசி மற்றும் போதை மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்த மாரி செல்வத்தை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து தாளமுத்து நகரில் உள்ள அவரது மருந்துக் கடையில் சோதனை செய்து அங்கிருந்த போதை ஊசி, மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சனி 31, மே 2025 5:46:53 PM (IST)

தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றிய 8,144 பேர் இன்று ஒரே நாளில் பணி ஓய்வு!
சனி 31, மே 2025 5:24:36 PM (IST)

அன்புமணி- ராமதாஸ் பிரிவினைக்கு நான் காரணமா? பாமக உட்கட்சி குழப்பதால் ஜி.கே.மணி வேதனை
சனி 31, மே 2025 5:20:29 PM (IST)

வள்ளுவரை சனாதன துறவி என்பதா? ஆளுநர் பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்!
சனி 31, மே 2025 5:15:55 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் தீவிரம் : ஆணையத் தலைவர் பெருமிதம்
சனி 31, மே 2025 4:51:36 PM (IST)

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆட்சியர் ஆய்வு!
சனி 31, மே 2025 4:16:14 PM (IST)
