» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்றவர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு

வெள்ளி 30, மே 2025 11:51:07 AM (IST)



தூத்துக்குடியில் மருந்து கடையில் போதை மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து, கடைக்கு சீல் வைத்தனர். 

தூத்துக்குடி லூர்தம்மாள்  புரத்தை சேர்ந்தவர் பாட்டையன் மகன் மாரி செல்வம் (22), இவர் தாளமுத்து நகரில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவர் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக வடபாகம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் திரேஸ்புரம் திருவள்ளுவர் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஊசி மற்றும் போதை மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்த மாரி செல்வத்தை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து தாளமுத்து நகரில் உள்ள அவரது மருந்துக் கடையில் சோதனை செய்து அங்கிருந்த போதை ஊசி, மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory