» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உயர்நீதிமன்ற தடையை மீறி கட்டணம் வசூல்: புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் லாரிகள் முற்றுகை
புதன் 4, ஜூன் 2025 10:39:10 AM (IST)

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடியில் உயர்நீதிமன்ற தடையை மீறி கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து லாரிகளை நிறுத்தி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை - தூத்துக்குடி சாலையில் எந்த பராமரிப்புப் பணியும் இல்லாமல், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் சேதமடைந்துள்ள சாலையை முழுமையாகச் சீரமைக்கும் வரை எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியபுரத்திலும் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு இன்னும் தங்களுக்கு வரவில்லை என்று கூறி புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடியில் வழக்கம் போல கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் அரி ராகவன் தலைமையில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்களது லாரிகளை நிறுத்தி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் செல்லும் அவசர வழியில் அனைத்து வாகனங்களும் இலவசமாக இயக்கப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடிட்டர் குருமூர்த்தி - ராமதாஸ் சந்திப்பில் பாஜக தொடர்பு இல்லை: நயினார் நாகேந்திரன்
வெள்ளி 6, ஜூன் 2025 11:06:58 AM (IST)

ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
வெள்ளி 6, ஜூன் 2025 10:59:39 AM (IST)

தருமபுரி அருகே விபத்தில் சிக்கிய நடிகர் டாம் சாக்கோ கார்: தந்தை உயிரிழப்பு!
வெள்ளி 6, ஜூன் 2025 10:40:15 AM (IST)

பொது இடங்களில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம் : சிபிஎம் மேல்முறையீட்டுக்கு அனுமதி
வெள்ளி 6, ஜூன் 2025 10:19:35 AM (IST)

கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!
வெள்ளி 6, ஜூன் 2025 8:53:22 AM (IST)

ரயிலில் கடத்திய ரூ.35 லட்சம் மெத்தபெட்டமைன் பறிமுதல்: பெண் உள்பட 6 பேர் கைது!
வெள்ளி 6, ஜூன் 2025 8:50:31 AM (IST)

எல்லாம்Jun 4, 2025 - 12:25:37 PM | Posted IP 104.2*****