» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உயர்நீதிமன்ற தடையை மீறி கட்டணம் வசூல்: புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் லாரிகள் முற்றுகை

புதன் 4, ஜூன் 2025 10:39:10 AM (IST)



தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடியில் உயர்நீதிமன்ற தடையை மீறி கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து லாரிகளை நிறுத்தி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மதுரை - தூத்துக்குடி சாலையில் எந்த பராமரிப்புப் பணியும் இல்லாமல், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் சேதமடைந்துள்ள சாலையை முழுமையாகச் சீரமைக்கும் வரை எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியபுரத்திலும் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு இன்னும் தங்களுக்கு வரவில்லை என்று கூறி  புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடியில் வழக்கம் போல கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் அரி ராகவன் தலைமையில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்களது லாரிகளை நிறுத்தி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் செல்லும் அவசர வழியில் அனைத்து வாகனங்களும் இலவசமாக இயக்கப்பட்டு வருகிறது. 


மக்கள் கருத்து

எல்லாம்Jun 4, 2025 - 12:25:37 PM | Posted IP 104.2*****

பிச்சைக்கார பயலுக

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory