» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொது இடங்களில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம் : சிபிஎம் மேல்முறையீட்டுக்கு அனுமதி

வெள்ளி 6, ஜூன் 2025 10:19:35 AM (IST)

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்ய மார்க்சிஸ்ட் கட்சிக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் 2 இடங்களில் அதிமுக கொடிக் கம்பங்களை அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்றுமாறு உத்தரவிட்டது. இதற்கு எதிரான மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவை மாற்றியமைக்கவும், மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரியும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு நேற்று விசாரித்தது. 

மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில், இந்த வழக்கில் அரசியல் கட்சிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்காமல் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், "இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய மார்க்சிஸ்ட் கட்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வழக்கில் தலைமைச் செயலர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory