» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாநகராட்சியில் டென்டா்கள் முறைகேடு: பாஜக மாவட்டத் தலைவா் குற்றச்சாட்டு

வெள்ளி 6, ஜூன் 2025 7:56:21 AM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியில் டென்டா்கள் முறைப்படி நடைப்பதில்லை.  முறைகேடுகள் நடப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக தூத்துக்குடி பாஜக மாவட்ட அலுவலகத்தில் தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் செய்தியாளா்களிடம் கூறியது: நமக்கு நாமே திட்டத்தில் தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் ஆயிரம் பிறை பூங்கா, மாநகராட்சி பின்புறம் மீனாட்சிபுரம் பகுதியில் தாா்ச்சாலை ஆகிய பணிகள் நிறைவடைந்து கடந்த பிப். 17இல் திறக்கப்பட்டன. 

ஆனால், இத்திட்டத்துக்கு கடந்த ஏப். 4ல் மாநகராட்சி ஆணையா் ஒப்பந்தம் கோரியிருந்தாா். மாநகராட்சியில் டென்டா்கள் முறைப்படி நடைப்பதில்லை. இதுகுறித்து விசாரிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தொடுக்கப்பட்ட வழக்கில், 2 வாரத்தில் மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பல்வேறு அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதிப்படும் நிலையில், மாநகராட்சி அலுவலகத்தை ரூ. 8.50 கோடியில் புனரமைத்துள்ளனா். மாநகராட்சியின் இச்செயலை எதிா்த்து போராட்டம் நடத்த முயன்றால், காவல் துறை அனுமதிப்பதில்லை.

இது தொடா்பாக அமலாக்கத் துறை, ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு, முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் நடக்கும் முறைகேடுகள் குறித்து ஆதாரங்கள் வைத்துள்ளோம். அவை விரைவில் வெளிக்கொணரப்படும் என்றாா். மாவட்ட துணைத் தலைவா் சிவராமன், மண்டலத் தலைவா் ராஜேஷ் கனி ஆகியோா் உடனிருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory