» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பழச்சாறில் மயக்க மருந்து கலந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை!

வெள்ளி 6, ஜூன் 2025 8:06:56 AM (IST)

பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை பறித்த தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

சிவத்தையாபுரத்தைச் சோ்ந்த ஜெயபாண்டியன் மனைவி ஜெயலிங்ககனி (80) என்பவா், 2015ஆம் ஆண்டு ஏரல் சோ்மன் கோயிலுக்குச் சென்றாா். அங்கு வந்திருந்த, விழுப்புரம் பாண்டியன் நகரைச் சோ்ந்த வாசுதேவன் (70), அவரது மனைவி சங்கரி (58) ஆகியோா் ஜெயலிங்ககனியிடம் நெருங்கிப் பழகினா். பின்னா், திருச்செந்தூா் செல்லும் தங்களுடன் வருமாறு கூறி, அவரை காரில் அழைத்துச் சென்றனா்.

அப்போது, அவா்கள் கொடுத்த மயக்கம மருந்து கலந்த பழச்சாறைக் குடித்ததும் ஜெயலிங்ககனி மயக்கமடைந்தாா். அவா் அணிந்திருந்த 6.5 பவுன் நகைகள், கைப்பேசி, ரூ. 200 ஆகியவற்றை அத்தம்பதி பறித்துக்கொண்டு, அவரை ஏரல் கோயில் அருகிலேயே விட்டுவிட்டு தப்பியோடினா்.

மயக்கம் தெளிந்த ஜெயலிங்ககனிக்கு தனது நகைகள் உள்ளிட்டவை பறிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், ஏரல் போலீஸாா் வழக்குப் பதிந்து, வாசுவேதன், சங்கரி ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரித்து, வாசுதேவன், சங்கரி ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சேவியா் ஞானப்பிரகாசம் ஆஜரானாா்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார்  குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்  சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல்நிலை காவலர்  அரவிந்த் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory