» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூலை 7ம் தேதி உள்ளூர் விடுமுறை : இந்து முன்னணி கோரிக்கை!
சனி 7, ஜூன் 2025 4:06:44 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி வருகிற 7ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இத்திருக்கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்திருக்கோவிலில் வருகின்ற 07.07.2025 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் தூத்துக்குடி பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடங்கள் போன்ற அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் முன்கூட்டியே திட்டமிட்டு விபத்துகள் எதுவும் நடக்காமல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆங்காங்கே தற்காலிக CCTV கேமராக்கள் வைத்து கண்காணிக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் : திமுகவினருக்கு முக.ஸ்டாலின் அழைப்பு!
சனி 28, ஜூன் 2025 12:31:31 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 5 புதிய கிளைகள் திறப்பு விழா
சனி 28, ஜூன் 2025 11:27:28 AM (IST)

திருச்செந்தூர் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஏற்பாடுகள் : ஆட்சியர் நேரில் ஆய்வு
வெள்ளி 27, ஜூன் 2025 5:19:29 PM (IST)

நாகர்கோவில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 27, ஜூன் 2025 4:58:02 PM (IST)

தமிழகத்தில் 40 சதவீதம் அரிசி உற்பத்தி குறைந்தது : தூத்துக்குடியில் பி.ஆர். பாண்டியன் பேட்டி
வெள்ளி 27, ஜூன் 2025 4:41:32 PM (IST)

அனைத்து மாணவர்களும் கட்டாயமாக மேற்படிப்பு படிக்க நடவடிக்கை : ஆட்சியர் தகவல்
வெள்ளி 27, ஜூன் 2025 3:39:19 PM (IST)
