» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் புதிய சிறப்பு நூலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

செவ்வாய் 10, ஜூன் 2025 12:26:41 PM (IST)



வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் புதிய சிறப்பு நூலகத்தினை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடம் மற்றும் கோட்டார் அரசு ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிறப்பு நூலகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து இன்று (10.06.2025) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் வடசேரி சிறப்பு நூலகத்தில் குத்துவிளக்கேற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில் - தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ மாணவியர்களின் பொது அறிவினை வளர்க்கவும், போட்டித்தேர்வுகளுக்கும், உயர்கல்வி படிப்பிற்கும் தேவையான அனைத்து குறிப்புகளை எடுத்து படிப்பதற்கு ஏற்றவாறு தமிழ்நாட்டிற்குட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்குட்பட்ட பள்ளிகளிலும் நூலகங்கள் அமைக்க வேண்டுமென ஆணையிட்டுள்ளார்கள். 

அதனடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திற்குட்பட்ட முக்கிய பகுதிகளில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டு மாணவர்கள் போட்டித்தேர்வர்கள் பயன்பெற்று வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு நூலகங்கள் அமைக்கும் திட்டத்தினை அறிவித்தார்கள்.

அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களில் 110 கூடுதல் நூலக கட்டிடங்களையும், 70 சிறப்பு நூலகங்களையும் சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்திற்கு வெளி நாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கும்போது தங்களது நேரத்தை பயனுள்ளதாக அமைத்திடும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் வடசேரி பேருந்து நிலையத்தில் சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கோட்டார் அரசு ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிலும் மாணவ மாணவியர்களும், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும் தங்கள் நேரத்தை பயனுள்ளதாக களிக்கும் வகையில் மருத்துவ கல்லூரி வளாகத்தில் சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்ததற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் சார்பிலும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட நூலக அலுவலர் மேரி, கோட்டார் அரசு ஆயுர்வேதா மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கிளாரன்ஸ் டேவி, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவஹர், மாநகராட்சி நிர்வாக பொறியாளர் ரெகு ராம், மாநகராட்சி உறுப்பினர்கள் கலா ராணி, மோனிகா விமல், உதவி நூலக அலுவலர் நசீர், ஆனந்த், நூலக அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory