» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
செவ்வாய் 10, ஜூன் 2025 4:57:55 PM (IST)

அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (10.06.2025) செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:- தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்ல வீடுகள் கட்டபட்டு வருகின்றன. அதனடிப்படையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2025-26-ஆம் ஆண்டிற்கு அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.535.50 இலட்சம் மதிப்பீட்டில் 153 பயனாளிகளுக்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டு வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுவாமிதோப்பு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் கனவு இல்லத்திட்டம் 2024-25 கீழ் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 2 வீடுகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது பூச்சு வேலைகள் நடைபெறவுள்ளது. தொடர்ந்து பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 2 வீடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பணிகளை தரமானதாகவும், உறுதித்தன்மையுடன் அமைத்திடவும் வீட்டின் பயனாளிகள் மற்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.6.81 இலட்சம் மதிப்பில் பூலான்குளம் வடக்கு கால்வாய் புனரமைத்தல் பணிகளும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கரூம்பாட்டூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.31.40 இலட்சம் மதிப்பில் கரும்பாட்டூர் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டும் பணிளையும், கலைஞரின் கனவு இல்லத்திட்டம் 2024-25 கீழ் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒரு வீடு பணிகளும், பிரதான் மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒரு வீடு பணிகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.6.96 இலட்சம் மதிப்பில் ஆண்டிவிளை போக்கு கால்வாய் புனரமைத்தல் பணிகளும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கோட்டையடியில் 60000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, நீர்தேக்கத் தொட்டியின் அருகே உள்ள பகுதிகளை சுத்தமாக வைக்கவும், குளோரின் கலவையினை பயன்படுத்தி குடிநீரை கிருமி நீக்கம் செய்யவும், மக்களுக்கு அன்றாடம் குடிநீர் விநியோகம் செய்யவும், அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் குலசேகரபுரம் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு பயனாளியின் வீட்டின் வர்ணம் பூசும் பணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென்தாமரைகுளம் இரண்டாம் நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியின் மொத்த பரப்பளவு 10.68 ச.கீ.மீ ஆகும். பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 21 குக்கிராமங்கள் உள்ளன. தற்போதைய மக்கள் தொகை 14327 ஆகும். துய்மை இயக்கம் தொடர்பாக நடைபெற்ற பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் குடிநீர் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்களிடம் மாணவ மாணவியரை அரசு பள்ளிகளில் சேர்க்க அறிவுரை வழங்கப்பட்டது. பொதுமக்கள் அலுவலகத்தில் வந்து குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரி செலுத்தியதற்கான ரசீதுகளை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட மூலதன மானியத் திட்டம் 2024-2025-ம் ஆண்டில் ரூ. 97.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு செல்லும் சாலையில் இருபக்கமும் பக்கச்சுவர் கட்டும் பணி மற்றும் 2024-2025-ம் ஆண்டு கலைஞர் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 176.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாலம் கட்டும் பணி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கிறிஸ்துநகர் நியாவிலைக்கடையில் அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டை வைத்துள்ள பயனாளிகள் தங்கள் கை ரேகை பதிவு செய்யும் பணியில் உள்ள முன்னேற்றம் தொடர்பாகவும் eKYC மின்னணு தராசை விற்பனை முனைய இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட பின் பொதுமக்களுக்கு சீரான முறையிலும் சரியான வேகத்திலும் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை குறித்தும், பொருட்களின் தரம் மற்றும் இருப்பு விபரங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வில் உதவிப்பொறியாளர்(ஊ.வ.)ஊ.ரெஜன் பணியாளர்கள், உதவிப் பொறியாளர் (ஊ.வ.), மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் பயனாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நானே பா.ம.க. தலைவராக நீடிப்பேன் : ராமதாஸ் திட்டவட்டம்
வியாழன் 12, ஜூன் 2025 12:52:12 PM (IST)

தனியார் விடுதியில் தாய், மகள் தற்கொலை : போலீஸ் விசாரணை!
வியாழன் 12, ஜூன் 2025 12:09:32 PM (IST)

மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
வியாழன் 12, ஜூன் 2025 11:51:22 AM (IST)

அரசு மருத்துவமனையில் கூடுதலாக 6 டயாலிசிஸ் எந்திரங்கள் : ஆட்சியர் துவக்கி வைத்தார்
வியாழன் 12, ஜூன் 2025 11:20:05 AM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோருக்கு விருது : ஆட்சியர் தகவல்
வியாழன் 12, ஜூன் 2025 11:14:46 AM (IST)

ராமரின் தொன்மத்துக்கு ஒரு நீதி; கீழடியின் தொன்மைக்கு ஒரு நீதியா? வைரமுத்து கேள்வி
வியாழன் 12, ஜூன் 2025 10:36:26 AM (IST)
