» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட நபர் 27 ஆண்டுகளுக்கு பிறகு சத்தீஸ்கரில் கைது
வியாழன் 10, ஜூலை 2025 12:03:53 PM (IST)
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 27 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. 12-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த வெடிகுண்டு சம்பவத்தை, தடை செய்யப்பட்ட அல் - உம்மா பயங்கரவாத அமைப்பினர் அரங்கேற்றினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய கோவை மாநகர காவல் துறையினர் வழக்கு பதிந்து ஏராளமானோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய பலர், தற்போதும் கோவை மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தவர் சாதிக் என்ற ராஜா என்ற டெய்லர் ராஜா. சுமார் 27 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் இந்த வெடிகுண்டு சம்பவங்கள் தொடர்பான வழக்கு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் எஸ்.பி.பத்ரி நாராயணன் தலைமையிலான கோவை மேற்கு மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு தகவலின் அடிப்படையில் டெய்லர் ராஜா, சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைமறைவாக இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் சத்தீஸ்கர் மாநிலத்துக்குச் சென்று அங்கு தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவரை கோவைக்கு அழைத்து வந்தனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு விதித்த தடை நிறுத்தி வைப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 10, ஜூலை 2025 4:27:01 PM (IST)

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்!
வியாழன் 10, ஜூலை 2025 12:08:58 PM (IST)

தமிழகத்தில் 1,996 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்.28-ம் தேதி தேர்வு: டிஆர்பி அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 11:44:41 AM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)
