» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச செல்போன் பழுதுபார்த்தல் பயிற்சி

சனி 2, ஆகஸ்ட் 2025 3:32:12 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமபுறங்களிலுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் இலவச செல்போன் பழுதுபார்த்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புறங்களிலுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும், 30 நாட்கள் கொண்ட இலவச செல்போன் பழுதுபார்த்தல் பயிற்சி 08.08.2025 அன்று தொடங்க உள்ளது.

பயிற்சியில் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 08.08.2025 ஆகும். இப்பயிற்சிகள் அனைத்தும் 100% செய்முறை பயிற்சிகளாக இருக்கும். இப்பயிற்சி நடைபெறும் போது சீருடை, அடையாள அட்டை, தேநீர், காலை உணவு, மதிய உணவு மற்றும் பயிற்சிக்கு தேவையான அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். எனவே இப்பயிற்சியில் 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள கிராமப்புற இளைஞா்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் -9944844019, 6379596738, 9791894159, தொலைபேசி எண். 04652 235462. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள இளைஞர்கள் நாகர்கோவில், பால்பண்ணை அருகில் இயங்கி வரும் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி கிராம சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தை அணுகலாம் என்று குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory