» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​ப​டா​மல் கொடிக் கம்பங்கள் அமைக்க விதிமுறைகள்: உயர்நீதிமன்றம்

வியாழன் 7, ஆகஸ்ட் 2025 3:15:06 PM (IST)

பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​ப​டா​மல் கொடிக் கம்​பங்​கள், கட்​-அவுட்​கள் அமைக்க விதி​முறை​கள் வகுக்க வேண்​டும் என்று உயர் நீதிமன்​றம் யோசனை தெரி​வித்​துள்​ளது. 

பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்​று​வது தொடர்​பாக மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்த வழக்​கில், பிற கட்​சிகள் இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​ய​லாம் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தெரி​வித்​தது. இதையடுத்​து, அதி​முக, விசிக, மதி​முக, இந்​திய கம்​யூனிஸ்ட், தவெக, தமிழக வாழ்​வுரிமைக் கட்​சி, மனிதநேய மக்​கள் கட்சி மற்றும் பல்​வேறு அமைப்​பு​கள் சார்​பில் இடை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஆர்​.​விஜயகு​மார், சவுந்​தர் ஆகியோரது அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தன.

அ‌தி​முக, கம்​யூனிஸ்ட் உள்​ளிட்ட கட்​சிகள் சார்​பில், பொது இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள கொடிக் கம்​பங்​களை அகற்​றக்​கூடாது, பட்டா நிலங்​களில் கட்​சிக் கொடிக் கம்​பங்​கள் அமைக்க அனு​மதி வழங்க வேண்​டும் என வேண்​டு​கோள் வைக்​கப்​பட்​டது. அரசு தரப்​பில், "கொடிக் கம்​பங்​கள் அமைப்​பது தொடர்​பாக உரிய வழி​காட்டு நெறி​முறை​களை வகுக்க அரசு தயா​ராக உள்​ளது” என தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த விவ​காரத்தை பொது நலனுடன் அணுகு​கிறோம். எனினும், இதற்கு தனி வழி​காட்டு நெறி​முறை​களை அரசு வகுக்க வேண்​டும். அரசி​யல் கட்சி கொடிக் கம்​பங்​கள் போக்​கு​வரத்​துக்கு பாதிப்பு இல்​லாமல் அமைக்​கப்பட வேண்​டும்.

நடிகர்​கள், அரசி​யல் கட்​சித் தொண்​டர்​கள் 60 அடி உயரத்​துக்கு கட்​-அவுட் வைத்​து, அதற்கு பாலபிஷேகம் செய்​கின்​றனர். எனவே, கட்​-அவுட்​கள் அமைப்​ப​தற்​கும் உரிய விதி​முறை​களை உரு​வாக்க வேண்​டும். இந்த வழக்​கில் இடை​யீட்டு மனுக்​களை தாக்​கல் செய்​துள்ள கட்​சிகள், அமைப்​பு​கள் சார்​பில் பதில் மனு தாக்​கல் செய்ய வேண்​டும்.

அந்த பதில் மனுவை அரசு தரப்​புக்​கும் வழங்க வேண்​டும். பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​ப​டா​மல், பூங்கா போன்ற பொது இடங்களில் கொடிக் கம்​பங்​களுக்கு தனி இடம் ஒதுக்​கு​வதற்​​கான ​வாய்​ப்​பு குறித்​தும்​ அரசு தெரிவிக்​க வேண்​டும்​. வி​சா​ரணை ஆக. 13-க்​கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது. இவ்​​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​விட்​டனர்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory