» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இரட்டை கொலை வழக்கில் 2பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

திங்கள் 1, செப்டம்பர் 2025 7:48:13 PM (IST)

இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2பேருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் கால்வாய் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பு மகன் சண்முகம் (67/13) மற்றும் நம்பி மகன் பட்டமுத்து  (32/13) ஆகியோரை கடந்த 25.01.2013 அன்று முன்விரோதம் காரணமாக கால்வாய் மாதங்கோவில் தெருவில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர்களான நம்பி மகன் மணி (57/2025), இசக்கி மகன் மாசாணம் (38/2025) ஆகியோர் உட்பட மொத்தம் 15 எதிரிகளை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி  தாண்டவம்  இன்று குற்றவாளிகளான மணி மற்றும் மாசாணம் ஆகிய இருவருக்கும் தலா இரட்டை ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூபாய் 20,000 அபராதம் விதித்தும் ஏனைய 13பேரை விடுதலை செய்து உத்தரவிட்டும் தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர்  பட்டாணி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்  ஆனந்த் கேப்ரியல் ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் அமுதாசூர்யா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory