» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 71-வது நினைவு நாள் விழா : ஆட்சியர் மரியாதை!

வெள்ளி 26, செப்டம்பர் 2025 4:00:40 PM (IST)



கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 71-வது நினைவு தினத்தையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 27.07.1876-ஆம் ஆண்டு பிறந்தார். 26.09.1954- ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்கள். அன்னாரது பணியினை நினைவு கூறும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு வருடமும் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் 71-வது நினைவு நாளையொட்டி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கந்தசாமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட் சுஷ்மா, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுஷ்யா, சுசீந்திரம் பேரூராட்சி துணைத்தலைவர் சுப்பிரமணியபிள்ளை, வருவாய் ஆய்வாளர் பிரேமகீதா, கிராம நிர்வாக அலுவலர் செல்வி.வளர்மதி, பேரூராட்சி உறுப்பினர்கள் காசி, தாணுமாலையபெருமாள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory