» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)
தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. புத்தாடை, பட்டாசு விற்பனை மும்முரமாக நடந்தது.
தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதனால் வீட்டு உபயோக பொருட்கள், புத்தாடைகள், பூஜை பொருட்கள், இனிப்புகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் குமரியில் தீபாவளி வியாபாரம் களை கட்டியது.
அதன்படி நாகர்கோவிலில் உள்ள கடை வீதிகளில் நேற்று காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. செம்மாங்குடி ரோட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பண்டிகைக்காக சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்களை கவரும் வகையில் புத்தம் புது மாடல்களில் ஆடைகள் கடைகளுக்கு வந்திருந்தன. அதை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து வாங்கிச் சென்றார்கள்.
மேலும் வடசேரி, ஆட்சியர் அலுவலகம் பகுதியில் உள்ள துணிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் கடைவீதியை நோக்கி வாகனங்களில் ஒருசேர படையெடுத்ததால் நாகர்கோவில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளியை குதூகலப்படுத்தும் வகையில் புத்தம் புது மாடல்களில் பட்டாசுகளும் விற்பனைக்கு வந்திருந்தன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை தேர்வு செய்து வாங்கிச் சென்றனர்.அதே சமயத்தில் தீபாவளியை கொண்டாட வௌியூரில் வசிக்கும் மக்களும் குமரிக்கு ரயில்கள், பஸ்கள் மூலம் திரும்பினர். நாகர்கோவிலில் வேலை பார்த்தவர்களும் அவரவர் ஊருக்கு கிளம்பினர். இதனால் பஸ்நிலையம், ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பயணிகள் வசதிக்காக நேற்றுமுன்தினம் முதல் குமரியில் இருந்து வெளியூர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 123 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
ஞாயிறு 19, அக்டோபர் 2025 1:14:38 PM (IST)

தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ட்ரோன் கேமரா மூலம் நகர் பகுதிகள் கண்காணிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 11:00:17 AM (IST)

கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபர்: ஓடும் ரயிலில் பரபரப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:29:36 AM (IST)

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை தொடங்கியது!
சனி 18, அக்டோபர் 2025 11:54:51 AM (IST)
