» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் : காவல் துறை அழைப்பு!

புதன் 22, அக்டோபர் 2025 3:36:41 PM (IST)

இறச்சகுளத்தில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்று குமரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம், இறச்சகுளத்தில் இயங்கி வந்த "JNF Trading" என்ற நிதி நிறுவனம், அதன் இயக்குநர்கள் மற்றும் மேலாளர்கள் மீது நாகர்கோவில் பொருளாதாரக் குற்றப்பிரிவு குற்ற எண்: 02/2025, U/s.406, 420, 120(B) IPC, Sec.5 of TNPID Act-1997 and Sec.21(3) and 23 of BUDS Act-2019-15.09.2025-4 செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. ஆகவே, மேற்படி நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த நபர்கள் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரடியாக வந்து புகார் மனு கொடுக்கும்படி நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், இது போன்று பணம் முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாகவும், நிலம் தருவதாகவும் மற்றும் பணம் இரட்டிப்பாக தருவதாகவும் கூறும் தனியார் நிதி நிறுவனங்களில் யாரும் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்றும், RBI அனுமதி பெற்ற தனியார் வங்கிகள் மற்றும் அரசு வங்கிகளில் முதலீடு செய்து பணத்தை பாதுகாத்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory