» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்திவைப்பு: விஜய் வசந்த் எம்.பி. தகவல்
சனி 22, நவம்பர் 2025 12:02:54 PM (IST)
குமரி மாவட்டம், நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில் பாதை இரட்டிப்பு பணிகளுக்காக நுள்ளிவிளையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ரயில்வே அதிகாரிகளை சந்தித்து அந்த பணியினை நிறுத்தி வைக்கும் படி கேட்டுக்கொண்டார். கோரிக்கை ஏற்ற ரயில்வே நிர்வாகம் அந்த பாலத்தை இடிக்கும் பணியினை நிறுத்தி வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் பாதை இரட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் பகுதியாக நுள்ளிவிளையில் உள்ள ரயில்வே மேம்பாலம் விரிவுபடுத்த தற்பொழுதுள்ள பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டுவதற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இந்த பாலம் இடித்து பணிகள் நடைபெறும் போது நுள்ளிவிளை பகுதியை சுற்றியுள்ள சுமார் 2௦ கிராம மக்களின் அன்றாட வாழ்வு தடைபடும் என கூறி பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தோட்டியோடு – திங்கள் நகர் சாலையில் இது பிரதான பாலம் என்பதால் இதை இடிக்கும் பட்சத்தில் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்படும். எனவே புதிய பாலம் கட்டி முடித்த பிறகு பழைய பாலத்தை இடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் கோட்ட ரயில்வே அதிகாரிகளை சந்தித்து பேசினார். இந்த கூட்டத்தில் மக்களின் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் பாலத்தை இடிக்கும் பணியினை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது மக்களின் கருத்தினைத் கேட்டறிந்து புதிய பாலம் அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
சனி 22, நவம்பர் 2025 3:25:44 PM (IST)

நிலத்தகராறில் திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பயங்கரம்!
சனி 22, நவம்பர் 2025 12:28:36 PM (IST)

கோவை, மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: முதல்வர் கடிதம்
சனி 22, நவம்பர் 2025 10:41:22 AM (IST)

லட்சுமி மில் மேம்பால பகுதியில் சர்வீஸ் ரோடு : நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!
சனி 22, நவம்பர் 2025 8:37:35 AM (IST)

அ.தி.மு.க., எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:43:39 PM (IST)

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு விதிமுறைகள்: தமிழக அரசு தாக்கல்!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:34:51 PM (IST)




