» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
வெள்ளி 28, நவம்பர் 2025 5:17:27 PM (IST)

சென்னையில் நாய் மற்றும் பூனைகளுக்கு உரிமம் பெறும் கடைசி நாள் அடுத்த மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பெருநகர மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.
இதனிடையே, செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்தவும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதாக தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற்றுக் கொள்வதற்காகவும் மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை (ஆன்லைன் போர்டல்) சென்னை மேயரால் கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் மக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்துவரும் நாய் மற்றும் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனைகளுக்கு உரிமம் பெறும் கடைசி நாள் அடுத்த மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னையில் உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்த்தால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலையில் எந்த பாகுபாடும் காட்டவில்லை: முதல்வர் ஸ்டாலின்
வெள்ளி 28, நவம்பர் 2025 5:12:00 PM (IST)

செங்கோட்டையன் சென்ற சென்னை-கோவை விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
வெள்ளி 28, நவம்பர் 2025 4:58:28 PM (IST)

டிட்வா புயல்: அவசியமின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்; முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 28, நவம்பர் 2025 4:40:33 PM (IST)

டிட்வா புயல்: தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்; வெள்ள அபாய எச்சரிக்கை!
வெள்ளி 28, நவம்பர் 2025 3:48:23 PM (IST)

டித்வா புயல் முன்னேற்பாடு நடவடிக்கைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
வெள்ளி 28, நவம்பர் 2025 3:13:29 PM (IST)

டியூட் படத்தில் கருத்த மச்சான் பாடலை நீக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 28, நவம்பர் 2025 12:26:08 PM (IST)




