» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீதிபதியை பதவி நீக்க கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு : பாஜக வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!

புதன் 17, டிசம்பர் 2025 3:40:57 PM (IST)



திருப்பரங்குன்றம் வழக்கில் உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானத்தை தள்ளுபடி செய்ய கோரி சென்னையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஏற்காத திமுக அரசு கூட்டணி கட்சி எம்பிக்களிடம் கையெழுத்து பெற்று, நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரி நாடாளுமன்றத்தில் தீர்மான நோட்டீஸ் வழங்கியது.

இந்நிலையில் இந்த தீர்மானத்தை தள்ளுபடி செய்யக் கோரி சென்னையில் பாஜக மாநில வழக்கறிஞர் அணி தலைவர் குமரகுரு தலைமையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பட்டத்தில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருந்த தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பதவி நீக்க தீர்மானத்தை ரத்து செய்யவில்லை எனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory