» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் சஸ்பெண்ட்!

வியாழன் 25, டிசம்பர் 2025 11:03:22 AM (IST)



ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த காவலரை சஸ்பெண்ட் செய்து கோவை மாநகர துணை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஷேக் முகமது, அண்மையில் சென்னையில் இருந்து கோவைக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சட்டக்கல்லூரி மாணவிக்கு காவலர் ஷேக் முகமது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதை அந்த மாணவி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து ரயில்வே போலீசாருக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த ரயில் காட்பாடி வந்தபோது, ரயில்வே போலீசார் காவலர் ஷேக் முகமதை கீழே இறக்கி விசாரணைக்கு அழைத்து சென்றனர். மேலும் மாணவி அளித்த புகாரின்பேரில் காவலர் ஷேக் முகமதை சஸ்பெண்ட் செய்து கோவை மாநகர துணை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory