» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் போலி ஐபோன் உதிரிபாகங்கள் விற்பனை : போலீசார் அதிரடி சோதனை!

வியாழன் 8, ஜனவரி 2026 3:43:14 PM (IST)


தூத்துக்குடியில் செல்போன் கடைகளில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி சுமார் ரூ.1லட்சம் மதிப்பிலான ஆப்பிள் போன் போலி உதிரிபாகங்களை பறிமுதல் செய்தனர் 

ஆப்பிள் போன் (iPhone)  உதிரி பாகங்கள், மற்றும் தயாரிப்புகள் ஆப்பிள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட  கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த நிலையில், ஆப்பிள் போன் போலி உதிரிபாகங்கள் பல இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஆய்வாளர் பியூலா தலைமையிலான போலீசார் தூத்துக்குடி தெற்கு புது தெரு பகுதியில் உள்ள செல்போன் கடைகளில் காப்புரிமை சட்டத்திற்கு முரணாக ஆப்பிள் போன்கள், உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? போலி உதிரி பாகங்களை பயன்படுத்தி பழுதுபார்க்கப்படுகிறதா?  என்று அதிரடி சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் 4 கடைகளில் இருந்த சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான போலி ஆப்பிள் போன் உதிரி பாகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேருக்கு கைது அறிக்கையை சமர்ப்பித்தனர். ஓரிரு தினங்களில் இவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory