» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆசிரியர் சங்க நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:23:27 PM (IST)
வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் "திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சம வேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் சங்க மாநில நிர்வாகிகளான ராபர்ட், ரெக்ஸ் ஆனந்தகுமார், கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் இருந்து வீட்டு சிலையில் திமுக அரசு வைத்துள்ளது. சுமுகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாமல், இப்படி சட்டத்துக்கு புறம்பான வகையில் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், அவர்களின் செல்போனைப் பறிப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.
கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் முதல்வர் ஸ்டாலின் ஏற்க வேண்டும். அறவழியில் போராடியதற்காக, ஆசிரியர்களைக் கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் "திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சம வேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் சங்க மாநில நிர்வாகிகளான ராபர்ட், ரெக்ஸ் ஆனந்தகுமார், கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் இருந்து வீட்டு சிலையில் திமுக அரசு வைத்துள்ளது. சுமுகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாமல், இப்படி சட்டத்துக்கு புறம்பான வகையில் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், அவர்களின் செல்போனைப் பறிப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.
கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் முதல்வர் ஸ்டாலின் ஏற்க வேண்டும். அறவழியில் போராடியதற்காக, ஆசிரியர்களைக் கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப்-2, 2ஏ தேர்வு திடீர் ரத்து: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இடமாற்றம்
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:57:46 AM (IST)

மிகப் பெரிய முறைகேட்டை மறைக்க டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து? விஜய் கேள்வி
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 7:39:54 PM (IST)

கொள்கையற்ற கூட்டத்துக்கு தக்க பதிலடி தரப்படும்! துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 2:29:41 PM (IST)

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 10:43:51 AM (IST)

தூத்துக்குடி மழை பாதிப்பில்லா மாநகராக மாற்றம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 9:12:34 AM (IST)

தேசிய கல்விக் கொள்கையை அரசியல் செய்யும் திமுக : பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!
சனி 7, பிப்ரவரி 2026 9:39:23 PM (IST)

