» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீடுபுகுந்து கல்லூரி மாணவிக்கு வெட்டு: கஞ்சா போதை இளைஞர் கைது; இருவருக்கு வலை!
புதன் 15, ஏப்ரல் 2026 5:19:42 PM (IST)
மீஞ்சூர் சென்னையை அடுத்த மீஞ்சூரில், கல்லூரித் தேர்வுக்காக வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதோடு, கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற கஞ்சா போதை கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் முகமது அஸ்கர். இவரது மகள் சுமையா ஃபாத்திமா (18), தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருவதால், நேற்று இரவு மாணவி தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தனியாகப் படித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்கள், வீட்டின் பின்புறம் உள்ள முட்புதர் வழியாகப் பக்கத்து வீட்டு மாடிக்குச் சென்று, அங்கிருந்து மாணவி ஃபாத்திமாவின் வீட்டு மாடியில் குதித்துள்ளனர். அறையில் புகுந்த அந்த கும்பல், மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. மாணவி கூச்சலிடவே, ஆத்திரமடைந்த அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஃபாத்திமாவின் தலை, கை மற்றும் கால் பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், தப்பியோட முயன்றவர்களில் ஒருவனை விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான். படுகாயமடைந்த மாணவி ஃபாத்திமா, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞர் டில்லி பாபு என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட டில்லி பாபு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 'ரீல்ஸ்' பதிவிட்டு அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்த மாணவி மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 15, ஏப்ரல் 2026 9:24:21 PM (IST)

விதிகளை மீறி திமுகவினர் ரூ.8,000 கூப்பன் விநியோகம் : தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!
புதன் 15, ஏப்ரல் 2026 5:11:00 PM (IST)

திமுகவின் 8000 ரூபாய் கூப்பன் மோசடியால் இளம்பெண் தற்கொலை: விஜய் குற்றச்சாட்டு!
புதன் 15, ஏப்ரல் 2026 4:53:13 PM (IST)

வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும்: குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 15, ஏப்ரல் 2026 3:54:55 PM (IST)

குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வளத் துறையினர் ஆய்வு
புதன் 15, ஏப்ரல் 2026 3:43:00 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.83.93 லட்சம் பறிமுதல்!
புதன் 15, ஏப்ரல் 2026 3:32:23 PM (IST)

