» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் மதுபாட்டில்கள் விற்பனை - ஒருவர் கைது
வெள்ளி 1, மே 2026 12:16:02 PM (IST)

தூத்துக்குடியில் கல்லூரி அருகே சட்டவிரோதமாகப் புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி - மதுரை ரோட்டில் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் பெண்கள் கல்லூரி அருகே சட்டவிரோதப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இன்று அதிரடிச் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, குறுக்குச்சாலை பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ் மகன் முனியசாமி (31) என்பவர் பிடிபட்டார். அவரிடமிருந்து சுமார் 42 கிலோ எடையுள்ள கணேஷ் புகையிலை, கூலிப் போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள், பணம் ரூ. 35,000 மற்றும் ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து முனியசாமி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் மேல் நடவடிக்கைக்காகச் சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. அவரை சிப்காட் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியை உலுக்கிய டொர்னடோ சுழல்காற்று: நடந்தது என்ன? ஆய்வாளர் விளக்கம்!
திங்கள் 22, ஜூன் 2026 12:05:19 PM (IST)

மீன் ஏற்றுமதி தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு : உயிரிழப்பு 5ஆக உயர்வு!
திங்கள் 22, ஜூன் 2026 8:25:35 AM (IST)

தூத்துக்குடியில் திடீர் சூறாவறளிக் காற்று: விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, ஜூன் 2026 8:23:31 PM (IST)

திருச்செந்தூரில் ரூ.18 கோடியில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் ஆய்வு
ஞாயிறு 21, ஜூன் 2026 9:08:48 AM (IST)

கூட்டுப் பாலியல் வன்கொடுமை - கொலை வழக்குகள் : 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
ஞாயிறு 21, ஜூன் 2026 8:55:35 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பாரதிய ஜனதா ஆயத்தம் : தூத்துக்குடியில் நிர்வாகிகள் ஆலோசனை!
ஞாயிறு 21, ஜூன் 2026 8:47:19 AM (IST)


